நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்க: மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?
சமீபத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் சில இடங்களில்,ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக தவறான தகவல்கள் பரவி வந்தன.இதனால் குழப்பம் ஏற்படக்கூடும் என்பதால்,நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எங்கள் நிறுவனம் எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நியமிக்கவில்லை.எங்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறி,ஏதேனும் தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் பணம் கேட்டு மோசடி செய்ய முயன்றால்,அவற்றை நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘தக்லைப்’ படத்தில் நடித்து வருகிறார்,இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. அதேபோல்,அன்பறிவ் இயக்கத்தில் உருவாகவுள்ள அவருடைய அடுத்த படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.