தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில், பிரபல நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா குறித்து பேசியுள்ளார். அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான “என் ராசாவின் மனசிலே” படத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அப்போது மீனாவின் வயது 15 தான்.
என் ராசாவின் மனசிலே படத்திற்கு கதாநாயகி தேடிட்டு இருந்தபோது ஒரு வார பத்திரிக்கையில், மீனாவோட போட்டோவை பார்த்தோம். அத பாத்துட்டு இந்த பொண்ணு படத்துக்கு கதாநாயகிய பொருத்தமாக இருப்பாங்களான்னு கஸ்தூரிராஜா கிட்ட சொன்னேன். அந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சுட்டு போய் பேசுங்க அப்படின்னு சொன்னதும், கஸ்தூரிராஜா என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க… இந்த பொண்ணு எப்படி சார் அப்படின்னு கேட்டார்.
அந்த சோலையம்மா கதாபாத்திரத்தில் அந்த பயந்த சுபாவம் அதுக்கு மீனாதான் பொருத்தமா இருப்பாங்க நீங்க மீனா கிட்ட பேசுங்க… அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அந்த படத்துல சோலையம்மாவா மீனா வாழ்ந்ததினால் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
மேலும், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மீனா ஆடை மாற்றவேண்டும் என இயக்குனர் கூற நடு ரோட்டிலே காரை ஓரமாக நிப்பாட்டிவிட்டு ஆடை மாத்திட்டு வந்து நடிச்சு கொடுத்தாங்க, அப்போது இந்த கேரவன் வசதியெல்லாம் கிடையாது என ராஜ் கிரண் கூறினார்.
முன்னதாக இந்த படத்தில் நடிக்க அழைத்த போது மீனா ராஜ்கிரன் ஹீரோ என்று கூறியதும் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். அதன் பின்னர், இயக்குனர் பேசி சமாதானம் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. பல கட்ட பஞ்சாயத்துக்கள் பலகட்ட அக்கப்போர்களுக்கு பின்னர் தான் அந்தப் படத்தில் மீனா நடித்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.