இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். காரணம் அந்த சமயத்தில் தான் கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதனால் இந்த சமயத்தில் திருமணம் செய்தால் கெரியர் வீணாகிவிடும் என கருத்தில் கொண்டு திருமணத்தை நிறுத்திவிட்டார் .
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
இந்நிலையில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிகை ராஷ்மிகா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நானும் ராஷ்மிகாவும் எப்போதும் போலவே தான் பேசிக்கொள்கிறோம். இப்போவும் நாங்க மெசேஜ் செய்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அவரவர் படங்கள் வெளிவரும் போது ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம். ராஷ்மிகாவிற்கு திரையுலகில் பல கனவுகள் இருக்கிறது. அதை அவர் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டார்.
அதனால் தான் தற்போது நேஷனல் க்ரஷ் ஆகியுள்ளார்” அவரது கனவு , லட்சியத்திற்காக சிலவற்றை இழந்து கடுமையாக முயற்சி செய்தார். அது அவருக்கு பலன் அளித்துள்ளது என பெருமையாக பேசியுள்ளார். தன்னை விட்டுச்சென்ற பிறகும் ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர், அவர் இன்னும் ராஷ்மிகா மீது அதே காதலோடு தான் இருக்கிறார் என கூறுகிறார்கள்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.