நட்சத்திர குழந்தையை பார்த்துக்கொள்ளும் ஆயாவிற்கு இத்தனை லட்சம் சம்பளமா? புலம்பும் VIP கூட்டம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் மகனான ராம் சரண் 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகமாக அமைந்து 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருதுகளை ராம் சரண் வென்றார்.

அதன் பிறகு மாவீரன் திரைப்படம் கைகொடுத்தது. கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த அந்த தம்பதிகள் ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண் குடும்பம் அறிவித்தது. அதையடுத்து அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடைபெற்றது.

கடந்த ஜூன் 20 அன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண்குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. பின்னர் ராம் சரண் மகளுக்கு பெயர் சூட்டுவிழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக முகேஷ் சிம்பனி தனது மனைவி நீடா அம்பானியுடன் கலந்துக்கொண்டு ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசாக கொடுத்தார்கள். 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டில் விலை மட்டும் ரூ.1 கோடி என்று செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்ப்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ராம்சரணின் மகள் “க்ளின் காரா கோனிடெலா”வை பார்த்துக்கொள்ளும் சாவித்ரி என்ற பணிப்பெண்ணிற்கு மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இவர் இதற்கு முன்னர் கரீனா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தையை பராமரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சம்பளத்தொகையை கேட்டு ஆடிப்போன வேலையில்லா பட்டதாரிகள் நம்மளும் பேசாமல் இது போன்ற ஆயா வேலைக்கே போய்டலாம் போல என புலம்பித்தள்ளியுள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.