சினிமா / TV

தெருநாயையே கல்யாணம் பண்ணிக்கோங்க- Dog Lovers பிரபலங்களை கண்டபடி கிழித்த இயக்குனர்?

நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு

நாடு முழுவதும் தெருநாய் கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் தெருநாய் கடித்து 6 வயது குழந்தை இறந்துபோனது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து டெல்லி பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் பிரியர்கள் பலரும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் பிரபல நடிகைகளான நீலிமா, வினோதினி ஆகியோர் இத்தீர்ப்பை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை சதா, கதறி அழுதபடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். மேலும் ஜான்வி கபூர், சோனாக்சி சின்ஹா ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் நாய் பிரியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நாயையே திருமணம் செய்துகொள்ளுங்கள்

இந்த நிலையில் பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா, தனது எக்ஸ் தளத்தில் நாய் பிரியர்களை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். “நாய்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என பேசும் நீங்கள், ஏன் தெரு நாய்களை திருமணம் செய்துகொள்ளக்கூடாது? ஏழைகளை தத்தெடுத்து உங்கள் வீட்டுற்குள் அவர்களை கூட்டி வாருங்கள், தெருக்களை நாய்களுக்காக விட்டுவிடுங்களேன்? 

தெருக்களில் நாய்கள் இருக்கவேண்டுமா? சரி, உங்கள் செல்ல நாய்களை தெருக்களில் விட்டுப்பாருங்கள், அது எவ்வளவு நாள் உயிர்பிழைத்திருக்கும் என பார்க்கலாம்?” என்று மிகவும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார். இவரது டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.