சினிமா / TV

நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து….? மனம் உடைந்து பேசிய கணவர் வம்சி!

54 வயதாகியும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இதுவரை நான்கு தென்னிந்திய ஃபிலிம் பேர் விருது, மூன்று நந்தி விருது, தமிழக அரசின் திரைப்பட விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வரும் இவர் ஆரம்பத்தில் ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

குறிப்பாக தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் அறிமுகமாகி நெரம் புலரும் போல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு வாழ்க்கை துவங்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பிறகு பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த படையப்பா திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் அவர் நீலாம்பரி கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இந்த கேரக்டர் இன்றுவரை நிலைத்து பேசும் படியாக ரம்யா கிருஷ்ணனுக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது. அதேபோல் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிவகாமி தேவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த கதாபாத்திரம் அவரின் வாழ்நாள் முழுக்க பேசும் படியான கதாபாத்திரமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல தெலுங்கு பட இயக்குனரான வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் மிகச்சிறந்த ஜோடியாக சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த ரம்யா கிருஷ்ணன் வம்சி ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும். இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அதாவது, நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும் அவரது கணவர் வம்சி ஹைதராபாதிலும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் எனவும் கூறப்பட்டது. இந்த தகவல் தீயாக பரவ அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணனின் கணவரான வம்சி.

இது குறித்து தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கும் ரம்யா கிருஷ்ணனின் கணவர் இந்த வதந்தி முற்றிலும் பொய்யானது. நாங்கள் இருவரும் தனித்தனியாக இருப்பதால் தான் இந்த வதந்தி உருவாகி இருக்கும் என நினைக்கிறன் . இப்படி வதந்திகள் பரப்புவதெல்லாம் ஒரு சேடிசம். இது எல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருது. இதுல ஒரு துளி கூட உண்மையே கிடையாது.

நாங்க ரெண்டு பேருமே ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பை வைத்துள்ளோம். அதனால் தான் இப்படி தேவையில்லாத வதந்திகளை உருவாக்குகிறார்கள். நாங்கள் இருவரும் வேலை விஷயமாக தனித்தனியாக வாழ்ந்து வருவதால் இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி இருப்பார்கள்.

மேலும் நாங்கள் இருவரும் சமீபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட இந்த வதந்தி உருவாக்கி இருக்கலாம். ஆனால் எங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சியில் குடும்ப நிகழ்வுகளில் ஒன்றாக சென்று வருகிறோம். அதற்காக அந்த புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும் என அவசியமில்லை.

இதையும் படியுங்கள்: நான் இறக்கப்போகிறேன்… என் சாவு இப்படி இருக்கும் – ஷாருக்கான் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!

நாங்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். வீட்டுக்கு சென்றால் எங்கள் உலகமே வேறு என வம்சி பேசியிருக்கிறார். என் மனைவி ரம்யா கிருஷ்ணன் மிகவும் வேடிக்கையான நபர் மனிதர்களை மிகவும் நேசிக்கக் கூடியவர் அக்கறையுடன் கவனித்துக் கொள்வார். வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர் அதே நேரத்தில் அவர் மிகுந்த புத்திசாலி எல்லா விஷயங்களிலும் மிகவும் சாதுரியமாக கூர்மையாகவும் இருப்பார். குடும்பத்தினை மிகவும் அக்கறையோடு கவனித்துக் கொள்ளக் கூடியவர் ரம்யா கிருஷ்ணன். இப்படி தன்னுடைய மனைவி ராஜமாதாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் வம்சி.

Anitha

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

9 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

10 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

10 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

11 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

11 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

12 hours ago

This website uses cookies.