த்ரிஷாவின் முன்னாள் காதலர் ராணா டகுபதி பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஆனால், அதற்குப் பிறகு ராணா நடித்த எந்த படங்களும் பெரிய அளவிலான வரவேற்பு பெறவில்லை
இந்த நிலையில், சமீபத்தில் துல்கர் சல்மானின் கிங் ஆப் கோதா படத்தின் விழா நடைபெற்றது. அதில், ராணாவும் கலந்து கொண்டு, மேடையில் பேசிய ராணா கூறிய ஒரு விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் தற்போது அவர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அதாவது மேடையில், பேசியபோது, துல்கர் சல்மான் மிகவும் பொறுமையானவர். நடிப்பு பள்ளியில் படிக்கும் போதிலிருந்து அவர் தனக்கு ஜூனியர். அப்போதிலிருந்து அவரை தெரியும். அவர் நடித்த ஒரு படத்தின் சூட்டிங்கை பார்க்க சென்று இருந்ததாகவும், அது தன்னுடைய வீட்டின் அருகில் இருந்ததாலும், தயாரிப்பாளர் தன்னுடைய நண்பர் என்பதாலும், சென்றதாகவும் அந்த ஷூட்டிங்கில் ஒரு பிரபல ஹிந்தி நடிகை நடிக்க வந்திருந்தார். அவர் மொத்த குழுவினரையும் காக்க வைத்துவிட்டு, அவரது கனவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் கூட பரவாயில்லை. ஆனால், அவர் ஷாப்பிங் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
மிகவும் அமைதியாக காத்துக் கொண்டிருந்தார் துல்கர். அந்த நடிகை வந்து நடித்தபோது டயலாக்கை மறந்துவிட்டார். அவரால் சரியாக நடிக்க முடியவில்லை. ஆனால், துல்கர் பல டேக் வந்தாலும் பொறுமையாக முகம் சுளிக்காமல் நடித்தார் என ராணா கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது The Zoya Factor என்ற படத்தில் நடித்தபோது சோனம் கபூர் இப்படி செய்தார் என கண்டுபிடித்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் மோசமாக ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். இது பெரிய சர்ச்சையான நிலையில் ராணா மன்னிப்பு கேட்டு பதிவு செய்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.