12 வயதில் தனக்கு தங்கை உள்ளதாக வெளியுலகத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அறிமுகம் செய்து வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை ராஷ்மிகா தற்போது PAN இந்தியா நாயகியாக உச்சம் பெற்றுள்ளார். கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் பரபரப்பான நாயகியாக மாறினார்.
இதையும் படியுங்க : பழம்பெரும் பாடகர் கேஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. திரையுலகம் ஷாக்!
தொடர்ந்து அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய் என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி உச்ச நடிகையாக திகழ்ந்தார். பாலிவுட்டில் இவர் நடித்த அனிமல் படம் ராஷ்மிகாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது.
மேலும் சல்மான் கானுடன் சிக்கந்தர், தனுஷ் உடன் குபேரா என டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
தனக்கு 12 வயதில் தங்கை உள்ளதாகவும் எனக்கு அவளுக்கு 16 வயது வித்தியாசம் என ராஷ்மிகா தெரிவித்துள்ளது சினி உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து மேலும் பேசிய ராஷ்மிகா, ஒரு கட்டத்தில் நான் அவளுடைய அக்கா என்று சொல்லாமல் அவளை வளர்த்து வந்தோம்.
இது உன்னோட வாழ்க்கை, எங்களை அதில் சேர்க்காதே என பெற்றோர்கள் என்னை அடிக்கடி சொல்வார்கள். என் தங்கை என்ன கேட்டாலம் இப்போது எதுவேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் எல்லாமே சுலபமாக அவளுக்கு கிடைக்கக்கூடாது என நினைத்துள்ளேன்.
காரணம் நான் தற்போது ஒரு பெரிய நடிகையாக வர, நான் வளர்ந்ததே காரணம். அப்படித்தான் அவளும் வளர வேண்டும் என நினைக்கிறேன்.
நிச்சயம் அவள் குறிப்பிட்ட வயதை அடைந்தததும், கண்டிப்பாக அவளுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவை கொடுப்போன் கூறி நெகிழ்ந்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.