சிறுவயதில் பொம்மை வாங்க கூட காசில்லாமல் ஏங்கிய நிலை குறித்து வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
தெலுங்கு படங்களில் நடித்து பாப்புலர் ஆன நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் கைவசம் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்கள் உள்ளன. நடிகை சமந்தா சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவர் நடிக்க மறுக்கும் பட வாய்ப்புகள் எல்லாம் ராஷ்மிகாவுக்கு தான் செல்கிறது.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்த ராஷ்மிகா, அதன்பின் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். வம்சி இயக்கியுள்ள இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா காதல் சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு. நடிகர் விஜய் தேவரகொண்டாவை இவர் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. சமீபத்தில் தன்னைப்பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் குறித்தும், காதல் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்துபேசியிருந்த ராஷ்மிகா, தற்போது சிறுவயதில் தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “சிறுவயதில் எனது பெற்றோரிடம் பணம் இருக்காது, குடும்பத்தில் அவ்ளோ கஷ்டம் இருக்கும். இரு மாதங்களுக்கு ஒரு வீடு மாறும் அளவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் பெற்றோர் என்னை வளர்த்தனர். ஒரு பொம்மை வாங்க கூட எங்களிடம் காசு இருக்காது. அதற்காக நான் மிகவும் ஏங்கி இருக்கிறேன்” என எமோஷனலாக பேசி உள்ளார் ராஷ்மிகா.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.