இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் “கிரிக் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என காலப்போக்கில் மிகவும் பிசியான நடிகையாக மாறினார்.
தற்போது தெலுங்கில் “தி கேர்ள் ஃபிரண்ட்”, ஹிந்தியில் “தாமா”, “மைசா” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது கியூட் புகைப்படங்களை ரசிக்கும் இளம் ரசிகர்கள் அப்புகைப்படங்களை வைரலாக்குவதும் உண்டு. இவரது கியூட் ரியாக்சன்களை பலரும் ரசித்தாலும் அதே சமயத்தில் இவரது ரியாக்சன்கள் டிரோலுக்கு உள்ளாவதும் வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா, தனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு ஒரு PR Team செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். அதே நேரத்தில் நான் அதனை வெளிகாட்ட முடியாது, ஏனென்றால் மக்கள், கருணை என்பது போலியானது என்றும் கருணை என்பது பலவீனமானது என்றும் நினைக்கிறார்கள். கேமராவுக்காக இவர் இவ்வாறு செய்கிறார் என பேசுகிறார்கள். நீங்கள் எவ்வளவு உண்மையானவராக இருக்கிறீர்களோ அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவராகவும் ஆகிவிடுகிறீர்கள்.
எனக்கு எதிராக நெகட்டிவ் PR Team செயல்பட்டு வருகிறது. பல டிரோல்களையும் சந்தித்திருக்கிறேன். உங்களால் அன்பு செய்ய முடியாவிட்டால் அமைதியாக இருந்துவிடுங்கள்” என அப்பேட்டியில் பேசியுள்ளார். ராஷ்மிகா இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.