இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமான ராஷ்மிகா அதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமாகி வருகிறது. மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா அணிந்திருக்கிறார். இதனால் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் “ஐயோ.. ரொம்ப யோசிக்காதிங்க” என்று ரிப்ளை செய்து அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் ராஷ்மிகா.
இப்படி அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையில் சிக்கி வரும் ரஷ்மிகா தற்போது பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ” அனிமல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ராஷ்மிகாவை சூழ்ந்து ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முந்தியடித்தனர். அப்போது ராஷ்மிகாவை நெருங்கி வந்து அவர் முன் போனை காட்டிய நபர் ஒருவரை பாடிகார்ட் இழுத்து அப்புறத்தள்ளினார். இதை பார்த்து பதறிப் போன ராஷ்மிகா அவரை விடுங்க ப்ளீஸ் என கெஞ்சினார். பின் ரசிகை ஒருவருடன் செல்பி எடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:
https://www.instagram.com/reel/CsTrQKuIqoU/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.