கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும் ரவி மோகனின் தோழியான கெனீஷாவும் கலந்துகொண்டார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக நடிகர் ரவி மோகன் தொடக்கத்திலேயே 10 திரைப்படங்களுக்கான பிராஜெக்ட்டை தயார் படுத்தி வருகிறார். மேலும் இதில் ரவி மோகன் யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவும் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, ரவி மோகன் குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.
“பட தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்குவது என்பது புது விஷயம் அல்ல. ஆனால் கந்துவட்டி காரர்களிடம் எல்லாம் ரவி மோகன் சார்பாக கடன் கேட்கிறார்களாம். இந்த தகவலால் ரவி மோகனின் குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறார்களாம். இப்படி அதிகளவு கடன் வாங்குகிறாரே என அவரது குடும்பமே கவலையில் இருக்கிறார்களாம்” என தனது வீடியோவில் பிஸ்மி ரவி மோகன் குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.