சினிமா / TV

அமலாக்கத்துறை வளையத்தில் திடீரென சிக்கிய ரவி மோகன்? இப்படியா ஒருத்தருக்கு பிரச்சனை வரணும்?

டாஸ்மாக் முறைகேடு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திமுகவிற்கு நெருக்கமான முக்கிய புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் ரத்தீஸ் ஆகியோரின் வீடுகளும் அடங்கும். 

இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைக்கேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரனும் ரத்தீஸும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த “இட்லி கடை”, “பராசக்தி”, “STR 49” ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அந்த வகையில் இவர்களுடன் ரவி மோகனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கராத்தே பாபு

அதாவது அமலாக்கத்துறை சோதனையால் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிற தொழிலதிபர் ரத்தீஸ் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் “கராத்தே பாபு” திரைப்படத்திற்கு நிதி கொடுத்ததாக கூறப்படுகிறது. “கராத்தே பாபு” திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மன்ட் சார்பாக சுந்தர் ஆறுமுகம் என்பவர் தயாரித்து வருகிறார். 

இந்த ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்திற்கு ரத்தீஸ் “கராத்தே பாபு” திரைப்படத்திற்காக நிதி அளித்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் ரவி மோகனும் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.