டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திமுகவிற்கு நெருக்கமான முக்கிய புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் ரத்தீஸ் ஆகியோரின் வீடுகளும் அடங்கும்.
இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைக்கேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரனும் ரத்தீஸும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த “இட்லி கடை”, “பராசக்தி”, “STR 49” ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அந்த வகையில் இவர்களுடன் ரவி மோகனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அமலாக்கத்துறை சோதனையால் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிற தொழிலதிபர் ரத்தீஸ் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் “கராத்தே பாபு” திரைப்படத்திற்கு நிதி கொடுத்ததாக கூறப்படுகிறது. “கராத்தே பாபு” திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மன்ட் சார்பாக சுந்தர் ஆறுமுகம் என்பவர் தயாரித்து வருகிறார்.
இந்த ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்திற்கு ரத்தீஸ் “கராத்தே பாபு” திரைப்படத்திற்காக நிதி அளித்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் ரவி மோகனும் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.
சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின்…
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…
தவமாய் தவமிருந்து சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…
This website uses cookies.