சினிமா / TV

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா

2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரவீனா தாஹா. அதனை தொடர்ந்து பல தொடர்களில் நடித்த இவர், விஜய் தொலைக்காட்சியின் “மௌன ராகம் 2” தொடரின் மூலம் பிரபலமானார். 

இதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி சீசன் 4” நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய ரவீனா, “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதனை தொடர்ந்து “ஜோடி ஆர் யு ரெடி” நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் ரன்னர் அப் ஆக வந்தார். 

இவர் சீரீயல்கள் மட்டுமல்லாது, “பூஜை”, “ஜில்லா”, “ராட்சசன்” போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்  ரவீனா தாஹாக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

ஒத்துழைப்பு தரவில்லை…

அதாவது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட “சிந்து பைரவி” தொடரில் தன்னை முன்னணி கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்துவிட்டு இரண்டாவது கதாநாயகிக்கான வாய்ப்புதான் வழங்கப்பட்டதாக கூறி ரவீனா தாஹா அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாராம். 

ஆனால் அந்த சீரியலில் இருந்து ரவீனா தாஹா கூறிய அக்காரணம் சரியானது அல்ல என்று புகார் எழுந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கமும் தொலைக்காட்சி நடிகர் சங்கமும் ரவீனாவுக்கு ஒரு வருடம் நடிக்க தடை போட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.