கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ” திரைப்படம் அதிகளவு எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படமாகும். ஆனால் ரசிகர்கள் சிலருக்கு இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் ஒரு சிலர் இத்திரைப்படத்தை குறித்து பாஸிட்டிவ் ஆகவே கூறி வந்தனர்.
பொதுவாக இத்திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது எனவும் ஆனால் இரண்டாம் பாதி திராபையாக இருப்பதாகவும் கூறினார்கள். எனினும் சூர்யாவின் ஆக்சன் காட்சிகள் அதகளமாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படம் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ரெட்ரோ” திரைப்படத்தை சூர்யா-ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.65 கோடி ஆகும். அந்த வகையில் கடந்த 4 நாட்களில் இத்திரைப்படம் உலகளவில் ரூ.80 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக வசூல் மட்டுமே ரூ.50 கோடியை நெருங்கவுள்ளதாம். இதன் மூலம் இத்திரைப்படத்திற்காக போடப்பட்ட முதலீட்டை கைப்பற்றியுள்ளார் சூர்யா.
இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான “கங்குவா” திரைப்படம் படுதோல்வியடைந்தது. மேலும் அத்திரைப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையும் கொடுத்தது. அந்த வகையில் “ரெட்ரோ” திரைப்படம் சூர்யாவுக்கு அதிக வசூலை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.