சினிமா / TV

சூர்யா பட ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்? மாஸ் ஆ இருக்கப்போகுது!

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி

கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். 

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் சூர்யா, ஜோதிகா ஆகியோரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. டீசரின் மூலம் இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணாடி பூவே”, “கனிமா” போன்ற பாடல்கள் சிங்கிள்களாக வெளிவந்தது. இதில் “கனிமா” பாடல் டிரெண்டிங் பாடலாக ரசிகர்களிடம் வலம் வந்தது. 

ஆடியோ வெளியீட்டில் ரஜினிகாந்த்

இந்த நிலையில் “ரெட்ரோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்களாம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்களாம். அது மட்டுமல்லாது “ரெட்ரோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். ஆதலால் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்தை வைத்து “பேட்ட” என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.