விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிகர் ரோபோ ஷங்கர் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அண்மையில் கூட அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படு ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
அளவுக்கு அதிகமான மதுவால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்த இவர் அவருடைய மனைவியால் மீண்டு வந்தார். மீண்டும் பாடி பில்டிங் போட்டியில் கலந்தும் கொண்டார். இந்த நிலையில், உலக நாயகனின் தீவிரமான ரசிகராக இருக்கும் ரோபோ ஷங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
33 வருடம் கழித்து மணிரத்தினமும் இணைய உள்ளார். என்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோபோ சங்கர் உலகநாயகன் படத்தின் அப்டேட் என்ன என்று தலைவர் அலுவலகத்தில் கால் செய்து கேட்கிறேன். நாயகன் படம் வெளியான போது கமலா தியேட்டரில் கொண்டாடினோம்.
இந்தியன் 2வுக்காக நானும் காத்திருக்கிறேன். உலக நாயகன் நம்ம ஊர்ல இருக்க வேண்டிய ஆடை கிடையாது. மீண்டும் வருகிறார் நாயகன் கமலா தியேட்டரில் வேற லெவலில் கொண்டாட்டம் இருக்கப்போகிறது. லியோ படத்தில் கமலஹாசன் வாய்ஸ் வருவதை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள் என்பதை அந்த இயக்குனர் கிட்ட கேட்கணும்.
கமல் என்ன கிழிச்சார் என்று கேட்க யாருக்குமே தகுதியே கிடையாது என்று ரோபோ சங்கர் காட்டமாக பேசியிருந்தார். மேலும், உம்மை தெரியாதவர்கள் உலகில் யாருமில்லை உண்மை தெரியாதவர்கள் இருந்தும் தேவையில்லை என்ற போஸ்டரை நான் தான் அடிக்கப் போகிறேன். லோகேஷ் கனகராஜ் கமல் சாரின் தீவிர ரசிகன் என்று ரோபோ சங்கர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.