‘ரகுவரன் இப்போது உயிரோடு இருந்திருந்தால்..’ முன்னாள் மனைவி ரோகிணி உருக்கம்..!

Author: Rajesh
19 March 2023, 6:30 pm
Quick Share

தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982ம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

raghuvaran - updatenews360

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

raghuvaran - updatenews360

90ஸ்களில் தமிழில் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி உள்ளிட்டோரின் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்து வந்தவர். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது.

raghuvaran - updatenews360

ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். பின்னர் 2008ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார். அவரது நினைவு தினத்தன்று பலரும் ரகுவரனை நினைவுகூரும் வகையில், அவரின் முன்னாள் மனைவி ரோகிணி இன்று ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

raghuvaran - updatenews360

“மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாக தான் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் அனைத்தையும் மாற்றி விட்டது. அவர் தற்போது இருந்திருந்தால் சினிமாவின் இந்த காலகட்டத்தை நேசித்து இருப்பார். ஒரு நடிகராகவும் அவர் அதிகம் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என ரோகிணி பதிவிட்டு இருக்கிறார்.

Views: - 552

0

0