படத்தில் மட்டுமல்ல வசூலிலும் பிரம்மாண்டம் : நிரூபித்து காட்டிய ராஜமெளலி..!

Author: Rajesh
25 March 2022, 6:59 pm
Quick Share

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதனையடுத்து வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டிப் பறக்கும் அளவுக்கு இப்படம் பலமான வியாபாரம் செய்தது.

தற்போது மீண்டும் அவரின் சாதனையை அவரே முறியடிக்க தொடங்கியுள்ளார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைபடத்தினை காண மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்த நிலையில், இந்தப் படத்தின் முன்பதிவு மார்ச் 22 ஆம் தேதியை தொடங்கியது.

இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ முன் பதிவு மற்றும் உரிமைகள் மூலம் சுமார் 750 கோடிகளை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் வாயிலாக, தனது படம் மட்டுமல்ல; தனது படத்தின் பிஸினஸும் பிரம்மாண்டம் தான் என நிரூபித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அவரின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாவதால் பாகுபலி படங்களைவிட ஆர்.ஆர்.ஆர் கூடுதல் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 870

6

2