ரூ. 100 கோடி நஷ்ட ஈடா…? என்னை விட்டுடுங்கோ – டெத் டிராமா போட்ட பூனம் பாண்டே கதறல்!

பாலிவுட் சினிமாவின் ஆபாச நடிகையாக பிரபலமாகியிருப்பவர் நடிகை பூனம் பாண்டே. மாடல் அழகியான இவர் 2013-ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர், “லவ் இஸ் பாய்சன்” எனும் கன்னட படத்திலும், “மாலினி அண்ட் கோ” எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

தான் நடிக்கும் படங்களில் இயக்குனர் கேட்பதற்கு இரண்டு மடங்காக கவர்ச்சி தூக்கி காட்டி நடித்து ஆபாச நடிகை போல் ரசிகர்களால் பார்க்கப்பட்டார். சினிமாவை தாண்டி இவர் ‘பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் படு மோசமான கவர்ச்சி, மற்றும் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைப்பார்.

அதுமட்டும் இன்றி சர்ச்சைக்குரிய வகையில் எதையேனும் கூறி எல்லோரையும் அதிர வைப்பார். அப்படித்தான் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டு ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வன்முறை செய்ததாக கூறி பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் வகையில் எதையேனும் செய்து மக்கள் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்ப பார்க்கும் நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து தான் உயிரோடு இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார்.

இதை கேட்டு பெரும் குழப்பத்திற்கு ஆளான தன் ரசிகர்களுக்கு, ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏராளமான பெண்கள் துரதிஷ்டவசமாக உயிரிழக்கிறார்கள். எனவே இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு விளம்பரம் தான் என் மரணச்செய்தி என கூறியிருந்தார். அதுக்காக இப்படியா விளம்பரம் செய்வது என பலர் அவரை திட்டித்தீர்த்தனர்.

அதன் பின் மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களுக்கு தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய பூனம் பாண்டே மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும், விளம்பரத்துக்காக இதுபோன்று நடந்துகொள்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பது போல சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஃபைசன் அன்சாரி என்பவர் பூனம் பாண்டேவுக்கு எதிராக எஃப்ஐஆர் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் பூனம் பாண்டே மற்றும் அவரை பிரிந்து இருக்கும் கணவர் சாம் பாம்பே இருவரும் தான் சேர்த்துக்கொண்டு தான் இந்த மரண டிராமாவை போட்டுள்ளனர்.புற்றுநோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக தனது சொந்த லாபத்துக்காக டெத் ட்ராமா போட்ட தண்டனைக்காக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். எனவே விரைவில் பூனம் பாண்டே கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விளையாட்டாக செய்த இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளிவருவது என தெரியாமல் பூனம் பாண்டே பயத்தில் நடுங்கி போய்கிடக்கிறாராம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

28 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

1 hour ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.