ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “காந்தாரா”. இத்திரைப்படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பஞ்சுருளி என்ற நாட்டார் தெய்வ கதையம்சத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இத்திரைப்படம் தென்னிந்தியா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “காந்தாரா சேப்டர் 1” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்தும் உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இத்திரைப்படத்தில் நடித்த மூன்று நடிகர்கள் பலியானார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பஞ்சுருளி தெய்வத்தின் சாபமாக இருக்குமோ? என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர். எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்த நிலையில் “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தை தயாரித்துள்ள ஹொம்பாலே நிறுவனம் இன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இதில் அவர் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாபாத்திரத்தின் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.
கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த ருக்மிணி வசந்த், “சப்த சாகரதாச்சே எல்லோ” திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியின் “ஏஸ்” திரைப்படத்தில் நடித்திருந்த அவர் தற்போது சிவகார்த்திகேயனின் “மதராஸி” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.