ஆசை ஆசையாய் சென்ற SJ சூர்யா.. அந்த வார்த்தை சொல்லி துரத்திவிட்ட காதலி.. ஃப்ளாஷ்பேக் ஸ்டோரி..!

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிப்பு அரக்கனாக திரையில் மிரட்டிக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், 55 வயதாகும் தனக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது, SJ சூர்யாவிற்கு காதல் தோல்வி இருந்துள்ளது. தன்னுடைய காதல் அன்பே ஆருயிரே திரைப்படத்தைப் போன்றே தான் இருக்கும். இருவரும் உண்மையாக காதலித்தோம். ஒரு முறை என் காதலி இரவு விருந்து ஏற்பாடு செய்து என்னை அழைத்திருந்தார். அந்த சமயத்தில், ஒரு தயாரிப்பாளர் படத்தைப் பற்றி பேச என்னை உடனே வரச் சொன்னார். நான் அங்கு சென்று விட்டேன்.

அந்த மீட்டிங் 12 மணி வரை நடந்தது. அதை முடித்துவிட்டு நான் அவசர அவசரமாக ஆசையோடு என் காதலியை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றேன். அப்போது, அவர் இது ஒன்றும் சத்திரம் இல்லை நினைத்த நேரத்திற்கு வருவதற்கு என முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டு, கதவை படார் என்று சாத்திக் கொண்டார். அதன் பிறகு என்னிடம் அவர் பேசவே இல்லை. அது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது. அந்த காதல் முறிந்து விட்டது. அதன் பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அப்போது, மூடிய என் இதயம் இப்போது வரை திறக்கவே இல்லை என்று தனது காதல் தோல்வி குறித்து எஸ் ஜே சூர்யா உருக்கத்துடன் பகிர்ந்து உள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.