“அப்பனே மகனுக்கு மாமா வேலை பாக்குறான்னு” சொன்னாங்க… வேதனையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்..! (வீடியோ)

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். புரட்சி இயக்குனர் என அழைக்கப்படும் அளவிற்கு அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் சட்டம் சார்ந்தவையாகவும், புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் அமைந்திருக்கும். விஜயகாந்தை வைத்து தான் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

தளபதியின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தளபதி விஜய்யை வைத்து 7 படங்களை கொடுத்து எடுத்து தூக்கிவிட்டார்.

பல கஷ்டங்களில் இருந்தாலும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் தற்போது சண்டை இருந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்றாலும் விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்து வந்தது. ஆனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான் என எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டியொன்றில் விஜயை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை என்று எஸ் ஏ சி கூறியுள்ளார். இதனிடையே, சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்த எஸ் ஏ சி, விஜய் குறித்த பல உண்மைகளை ஓப்பனாக கூறியுள்ளார்.

அதில் சித்ரா லட்சுமணன் உங்கள் மகன் விஜய் நடித்த படத்தில் எந்த படம் கவர்ந்தது என்ற கேள்வி கேட்டார். அதற்கு எஸ்ஏசி, எனக்கு எப்பவும் ரசிகன் தான். ஃபுல் எண்டர்ரெண்ட் படமாக விஜய்யின் வாழ்க்கையை மாற்றியது அதனால் எனக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.

ரசிகன் படத்தினால் பலர் திட்டியும் விமர்சித்தும் இருந்தனர். படத்தில் விஜய் பல கிளாமர் காட்சியில் நடிகையுடன் நடித்திருப்பதால், என்னை, அப்பனே மகனுக்கு மாமா வேலை பார்க்கிறான் என்று சிலர் திட்டினார்கள் என்று எஸ்ஏசி தெரிவித்தார்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.