“மடியிலேயே உயிர் போயிடுச்சு”…. விஜய்க்கு அந்த ஏக்கம் இப்பவும் இருக்கு… வருத்தத்துடன் பகிர்ந்த SAC..!

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இறந்த தனது மகளின் கடைசி தருணங்களை குறித்து, எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவர் மனைவி சோபா ஆகியோர் ஒரு பேட்டியில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் பேட்டிகளில் பங்கேற்று தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து வருதத்துடன் பேசி வருகிறார்.

இதுகுறித்து, தன் மனைவி ஷோபாவுடன், பேட்டி ஒன்றில் இறந்து போன தனது மகள் குறித்து சோகமான தருணங்களை, உருக்கத்துடன் கூறியுள்ளார்.

அதாவது, தனது மகளுக்கு நோய் இருப்பது தெரிந்து, மிகவும் கவனத்துடன் பார்த்து வந்ததாகவும், ஏவிஎம் உள்ளிட்ட எந்த இடத்துக்கு ஷூட்டிங் சென்றாலும், மகளையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றதாகவும்,

ஒரு நாள் தான் ஷூட்டிங் கிளம்பும்போது, திடீரென தன் கையைப் பிடித்துக் கொண்டு அப்பா என் கூடவே இருங்க என அழுதாள் என மிகவும் உருக்கத்துடன் கண்கலங்கி தெரிவித்தார். அப்படியே கொஞ்ச நேரத்தில் வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது. இதனால், நாங்களும் அவளை தூக்கிக்கொண்டு ஓடினோம்.

இருந்தாலும் கடைசி நேரத்தில் தன் மடியிலேயே, மகளின் உயிர் பிரிந்து விட்டது என்றும், விஜய்க்கு தங்கையை பிரிந்த அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது. இதை மட்டும் எங்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என இருவரும் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

Poorni

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

13 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

13 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

13 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

14 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

15 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

15 hours ago

This website uses cookies.