மகன் விஜய்க்கு செய்த உதவி… விஜயகாந்துக்கு சொத்தையே எழுதி கொடுத்த எஸ்.ஏ.சி!

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலமின்றி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இதனிடையே இன்று காலை (டிச.28) சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (71)

அவரது மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி காலமானார்” என அறிவித்தனர்.

இதையடுத்து விஜயகாந்தின் மறைவால் திரைபிரபலங்கள், தேமுதிக கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு நேரில் சென்று தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு 4:45 க்கு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் விஜய்க்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளதை பேட்டி ஒன்றில் கூறிய விஜய்யின் தந்தை எஸ். ஏ. சி…. ஆரம்பத்தில் விஜய்யை வைத்து நான் இயக்கிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து எனக்கு கடன் பிரச்சனையை உண்டாக்கியது. அதன் பின்னர் விஜய்யின் இரண்டாவது படத்தில் நடிக்க கேட்டு விஜயகாந்திடம் உதவி கேட்டேன். அவரும் உடனே ஓகே சொல்ல நான் 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு விஜயகாந்த்தை சந்திக்க சென்றேன். ஆனால், அவர் அந்த பணத்தை வாங்கவே மறுத்துவிட்டார்.

நான் விஜயகாந்த் வீட்டு பக்கத்தில் ஒரு வீடு இருக்கவேண்டும் என நினைத்து இடம் ஒன்றை சொந்தமாக வாங்கி வைத்திருந்தேன். அதனை பிரேமலதா என்னிடம் விலைக்கு கேட்டார். ஆனால், விஜயகாந்த் என் மகனுக்கு செய்த உதவியால் நான் அவருக்கு தெரியாமல் அந்த இடத்தை ரெஜிஸ்டர் பண்ணி கொடுத்தேன். விஷயம் தெரிந்தபின் விஜயகாந்த்…”என்னை கேவலப்படுத்திட்டீங்க” என்று கத்தினார். நான் சம்பாதித்தேன், நீங்க பெருந்தன்மையோடு இருந்ததுக்கு நான் செஞ்சிட்டேன் என்று சொன்னேன் என எஸ் ஏ சி உருக்கமாக கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

16 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

17 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

17 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

18 hours ago

This website uses cookies.