தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகராக இருந்து வரும் சாய்பல்லவி மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தனது நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த சாய்பல்லவிக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் மளமளவென உருவாகி விட்டார்கள் .
இதனுடையே தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .
இந்த நிலையில் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவி ரேஞ்சே வேற லெவலுக்கு உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட நயன்தாராவை மிஞ்சும் அளவுக்கு சாய் பல்லவி இந்த படத்தின் மூலமாக பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .
அமரன் திரைப்படத்திற்காக ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிய சாய்பல்லவி அடுத்ததாக ராமாயணம் படத்தில் சீதையாக நடிகர் ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாய்பல்லவி அடுத்தடுத்த திரைப்படங்களில் இதுபோல் வெற்றியை குவித்தால் அவரது சம்பளம் பல மடங்கு உயர்ந்து நயன்தாராவையும் மிஞ்சிவிடுவார்.
அடுத்தது நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்க மாட்டார் என்றெல்லாம் திரை உலக வட்டாரத்தில் பேசப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு பந்தா இல்லாத சிறந்த நடிகையாக சாய்பல்லவி தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். இவரது சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 47 கோடி என கூறுகிறார்கள்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.