பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷும் சைந்தவியும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பல இனிமையான பாடல்களை பாடியுள்ளார். “பிறை தேடும் இரவிலே”, “என் ஜீவன்” போன்ற பாடல்கள் ரசிகர்களை மெய் மறக்கச் செய்பவை. அந்த வகையில் இருவரும் பிரிந்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இருவரும் மீண்டும் சேர்ந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களது ஆவலை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் “வாத்தி” திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் “வாத்தி” பட இயக்குனர் வெங்கி அட்லூரிக்கும் நடிகர் தனுஷிற்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை குறித்த சந்தோஷத்தையும் பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷின் பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சைந்தவி, ஜிவி பிரகாஷிற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரின் கவனத்தை குவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.