சினிமா / TV

“என் ஆயுள் ரேகை நீயடி”..ஜி.வி பாடியதை ரசித்த சைந்தவி…உற்சாகத்தில் ரசிகர்கள்..!

ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த தருணம்

தமிழ் திரையுலகில் நிறைய பிரபலங்கள் அவர்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து பெற்று வாழ்கின்றனர்.

சிலருடைய பிரிவு ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தும்,அந்த வகையில் தான் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவி பிரிந்தது ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியாக்கியது.

சிறுவயதில் இருந்தே இருவரும் காதலித்து,பின்பு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இவர்கள் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூறி வந்தனர்.

இதையும் படியுங்க: மணக்கோலத்தில் நடிகர் காளிதாஸ்…குருவாயூரில் நடந்த திருமணம்…!

இந்த நிலையில் சைந்தவி சில நாட்களுக்கு முன்பு ஜி வி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் பாடப்போவதாக அறிவித்தார்.இதனை கேட்டு ரசிகர்கள் அந்த இசை நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

இசையால் இருவரும் இணைவதை அனைவரும் பாராட்டி வந்த நிலையில்,நேற்று பிரம்மாண்டமாக மலேசியாவில் அரங்கேறிய இசை நிகழ்ச்சி மேடையில்,சைந்தவி பாட ஜி வி பிரகாஷ் இசையமைக்க,அங்கிருந்த ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அதில் குறிப்பாக மயக்கம் என்ன படத்தின் பிறை தேடும் பாடலின் ஒரு பல்லவியை சைந்தவி பாடி முடிக்கும் போது,திடீரென ஜி வி “என் ஆயுள் ரேகை நீயடி” என அடுத்த வரியை பாட அங்கே இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி,இருவரும் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.