“என் கடனை கட்ட முடியாதுன்னு அப்பா சொல்லிட்டாரு”… வறுமையில் பட்ட வேதனையை பகிர்ந்த சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறிக காலத்திலே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 4 வருடத்திலேயே இந்த திருமண வாழ்க்கையில் முடித்துக் கொண்டனர் . 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். அதை அடுத்து சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பாலிவுட் படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் .

இந்த நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி கலந்து கொண்டார் சமந்தா. அதில் தன் வாழ்வில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களையும் இதுவரை வெளியில் சொல்லாத பல தகவல்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். அப்போது திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் சமந்தாவின் கனவா என கேள்வி எழுப்பியதற்கு, “எனது கடனை திருப்பி செலுத்த மாட்டேன் என்று எனது தந்தை கூறியதால் தான் நான் சினிமாவில் நடிக்கவே வந்தேன்.

எனது மேற்படிப்புக்கு பணம் செலுத்த என்னுடைய குடும்பத்திடம் பணமே இல்லை எனவே நான் வேறு வழியில்லாமல் சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். “உன்னுடைய கடனை என்னால் செலுத்த முடியாது என்று என் தந்தை கூறிய அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது” என சமந்தா தெரிவித்தார். இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.