தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா “சுபம்” என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
இவரை பலரும் ஒரு சாதனை பெண்ணாகவே பார்க்கின்றனர். இவர் பல வருடங்களாகவே மையோசிடிஸ் என்ற அரிய நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆதலால் திரைப்படங்களில் நடிப்பதை முன்பை விட சற்று குறைத்துக்கொண்டார். எனினும் தன்னை பாதித்திருக்கும் நோயை எதிர்கொண்டு போராடி டாப் நடிகை என்ற புகழையும் தக்க வைத்துக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சமந்தாவை பற்றி சுதா கொங்கரா கூறிய செய்தி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
சமந்தாவை பற்றி பேச மேடையேறிய சுதா கொங்கரா, “நான் சமந்தாவை இரண்டு திரைப்படங்களுக்காக நடிக்க அழைத்தேன். ஆனால் அவர் நடிக்கவில்லை” என்று கூறினார்.
இதனை கேட்டதும் அருகில் நின்றுகொண்டிருந்த சமந்தா, “என்ன சொல்றீங்க? என்ன படத்துல?” என அதிர்ச்சியாக கேட்டார்.
அதற்கு சுதா கொங்கரா “எனது ஹிந்தி திரைப்படமான சர்ஃபிராவில் நடிக்க அவரை அணுகினேன். நவரசா திரைப்படத்திற்கும் நான் அவரை அணுகினேன். ஆனால் அவருக்கு அப்போது Date இல்லை. நான் சமந்தாவின் மிகப்பெரிய ரசிகை. வருங்காலத்தில் எனது திரைப்படங்களில் நடிப்பார் என நம்புகிறேன்” என்று கூறினார்.
சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “பராசக்தி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.