அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் அவர் படங்களில் நடித்து வந்ததால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.
இதனால் உடல் நிலையில் முழு அக்கறை செலுத்தி சிகிச்சை பெற்று பரிபூரணமாக குணமடைந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன் என கூறி ஒரு வருடம் இடைவெளி விடுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்த பிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார். மேலும் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டார். சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.
இதனிடையே சமந்தா குறித்த ஒரு அதிர்ச்சிகரான செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதாவது, நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் பிரபல நடிகரிடம் இருந்து மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக ரூ. 25 கோடி கடன் வாங்கியுள்ளாராம். அது யாரென்று தெரியவில்லை. மேலும் சமந்தாவிற்கு இவ்வளவு பணம் ஏன் தேவைப்பட்டது? அவர் சம்பாதித்த பணத்தையெல்லாம் என்ன செய்தார் என பல கேள்விகள் எழுந்தது. உறுதிப்படுத்தாத இந்த செய்தி சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாய் பரவ இது குறித்து காட்டமாக பதிலளித்துள்ளார் சமந்தா.
அந்த பதிவில், மயோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை பரப்பியுள்ளார்கள். அதில் ஒரு சிறிய தொகையை நான் என் சிகிச்சைக்காக செலவு செய்து வருகிறேன். என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. சினிமாவில் வேலைபார்த்து நான் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், யாரிடமும் கடன் வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நான் பாதிக்கப்பட்டுள்ள மயோசிடிஸ் என்ற இந்த நோய் என்னை போல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள். நன்றி எனப் பதிவிட்டு வதந்திகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.