நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் பிரிகிறோம் என தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இதுகுறித்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், இவர்களது பிரிவுக்கு அவரவர்களுக்கு தெரிந்த தகவல்களைக் கூறி வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. விவாகரத்துக்கு பிறகு இருவரும் சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். நடிகை சமந்தா யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு புது படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார். ஏற்கனவே அவரது கணக்கில் இருந்த நாக சைதன்யா போட்டோக்கள் அனைத்தையுமே சமந்தா நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு நாக சைதன்யாவும் அவரை அன்ஃபாலோ செய்துள்ளார். திருமண முறிவு ஏற்பட்டாலும், நட்பு தொடரும் என்று அறிவித்த நிலையில் இந்த தம்பதியின் இந்த நடவடிக்கைகள், அவர்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமந்தா ஏற்கனவே தனது திருமண சேலையை நாகார்ஜூனா குடும்பத்துக்கு திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், இப்போது மொத்தமாக அனைத்தையும் முடிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் அன்ஃபாலோ செய்திருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.