தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.
சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் நான் ஒரு மிடில் க்ளாசில் பிறந்த பெண் தான். எனக்கு படிப்பில் அதிகம் ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தேன். பின்னர் 12ம் வகுப்பு கல்லூரிகளில் படிக்கும்போது என் பெற்றோர்களால் என்னை படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இதனால் நான் கிடைத்த வேலைகளை செய்து என் குடும்பத்தை கவனித்தேன். திருமண விழாக்களில் வரவேற்பாளர் வேலைக்கு செல்வேன். அதற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் தருவார்கள். அது பத்தாது. அதனால் ஒரு வேலை சாப்பாடு மட்டும் சாப்பிட்டு விட்டு மீதி நேரம் பட்டினி கிடப்பேன். ஆனால், ஒரு விஷயத்தில் நான் தெளிவான நோக்கத்துடன் இருந்தேன். என் இலட்சியத்தை அடைவதில்.
முதலில் மாடலிங் துறையில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க பின்னர் சினிமாவில் நுழைந்தேன். சம்பந்தமே இல்லாத இந்த துறையில் நடிப்பை கற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக திறமையை வளர்த்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனவே உங்களுக்கு சொல்லிக்கொள்வது இது தான், உங்கள் பாதை என்ன என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள், நீங்கள் எதை வேண்டுமானாலும் கனவு காணுங்கள், அதை நீங்கள் அடைவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் தோல்வி அடைந்தாலும், விடாமுயற்சியை கைவிட்டுவிடாதீர்கள், நிச்சயம் ஒரு நாள் கனவை எட்டுவீர்கள் என்றார் சமந்தா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.