விரைவில் இரண்டாம் திருமணம்…? காதலனின் Propose’க்கு சமந்தா சம்மதம்!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இப்படியான சமயத்தில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக சில வருடங்கள் டேட்டிங் செய்து காதலித்து வந்தார்.

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான போதிலும் நாங்கள் காதலிக்கவில்லை என மறுத்தனர். பின்னர் திடீரென கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இரு வீட்டாரின் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது நாக சைதன்யா மற்றும் சோபிதா இவர்களின் திருமண நிச்சயதார்த்த நாளில் ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவுக்கு காதல் ப்ரபோஸ் செய்து வீடியோ ஒன்றை instagram-ல் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நடிகை சமந்தா வீடியோவின் பின்னணியில் உள்ள உடற்பயிற்சி கூடம் கிட்டத்தட்ட என்னை சம்மதிக்க வைக்கிறது என ரிப்ளை செய்திருக்கிறார். அவரின் அந்த பதிலுக்கு ஏகப்பட்ட லைட்ஸ் குவிந்து வருகிறது. இதன் மூலம் நடிகை சமந்தா தற்போது தான் உடற்பயிற்சி மற்றும் நடிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் மற்றும் கவனத்தை செலுத்தி வருவதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.