தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது “மா இண்டி பங்காரம்” என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்து நடித்தும் வருகிறார்.
சமந்தா தான் பல ஆண்டுகளாக மையோசிடிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்தார். இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார்.
சமந்தா சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். அவர் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற பிறகு பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்தார். இதில் பல துரித உணவுகளின் நிறுவனங்களும் அடங்கும். ஆனால் சமந்தா எப்போதும் உடல் ஆரோக்கியத்தை குறித்தே பேசி வருகிறார்.
இந்த முரண் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர், “நான் சினிமாத் துறைக்குள் நுழைந்தபோது வெற்றி என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்றால், உங்களது முகம் எத்தனை பிராடெக்டுகளில் இருக்கிறது என்பதை பொறுத்துதான். அந்த சமயத்தில் என்னை தேடி பல மல்டி நேஷனல் பிராண்டுகள் வந்தன. அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று நினைத்தேன்.
நான் 20 வயதுகளில் இருந்தபோது துரித உணவுகளை உட்கொண்டிருக்கிறேன். நான் செய்த செயல்களினால் விளைவுகள் ஏற்படாது என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன். நான் இனி விளம்பரப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கடந்த வருடம் மட்டும் 15 பிராண்டுகளுக்காக வந்த விளம்பரங்களை தவிர்த்திருக்கிறேன். அது பலகோடி ரூபாய் வருமானம்” என்று பதிலளித்திருந்தார். சமந்தாவின் இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.