அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, விவாகரத்தும் பெற்று விட்டார்.
மேலும், சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி மற்றும் சீட்டாடல் வெப் தொடர் உருவாகி வருகிறது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்தநிலையில், “சிட்டாடெல்” வெப் தொடரின் இந்திய பதிப்பில் இந்தி திரையுலக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதில் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவான் உட்பட பலர் நடிக்கின்றனர். இதை “தி பேமிலி மேன்” வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர். இதில் நடிகை சமந்தா பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க போவதாக தகவல் வெளியனது. இதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, மேலும் இந்த கதை 1980,90களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சியில் சமந்தா மற்றும் வருண் நடிக்கின்றனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மூத்த நடிகைக்கு சமந்தா அம்மாவாக நடிப்பது பற்றி கிண்டல் செய்து வருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமந்தா, வருண் மற்றும் படக்குழுவினர் விரைவில் செர்பியா செல்ல உள்ளனர். அங்கு ஒரு மதத்திற்கு மேல் படப்பிடிப்பு நடக்கும் என்ற தகவல் வெளிவந்து உள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.