நடிகை சமந்தா, உடன் நடித்த நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறினர்.
இருவரும் பிரிந்த பிறகு, அவரவர் வாழ்க்கையை நோக்கி பயணித்தனர். நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தாவோ நோய்வாய்ப்பட்டு பின்னர் குணமாகி மீண்டும் நடித்து வருகிறார்.
இதனிடையே எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என ரசிகர்கள் சமந்தாவை கேட்டு வருகின்றனர். இந்தநிலையில் சமந்தா நடித்த ஃபேமிலி மேன், சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரியஸ்களை இயக்கிய இயக்குநர் ராஜூவுடன் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
உண்மையில் இருவரும் காதலிக்கின்றார்களா என நெடிசன்கள் இணையத்தில் பதிவுகளை பறக்க விட்ட நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் ஜோடியாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இப்படியிருக்க, நடிகையாக வலம் வந்த சமந்தா, சுபம் என்ற படத்தை தயாரித்தன் மூலம் தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில் கேமராவை நோக்கி நடந்து வந்த சமந்தா, Nothing to hide என எழுதுகிறார். மேலும் நாக சைதன்யாவை காதலிக்கும் போது அவர்கள் நடித்த முதல் திரைப்படமான ஏ மாயா சேசவே என்ற படத்தை நியாபகப்படுத்தும் விதமாக YMC என டாட்டூ குத்தியிருந்தார். அது தற்போது சமந்தா கையில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
Nothing to hide என சமந்தா எழுதியுள்ளதால், ஒரு வேளை ராஜூவுடனான காதல் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறாரா? அல்லது நாக சைதன்யாவை ஏன் பிரிந்தேன் என்ற காரணத்தை வெளியிடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் அதிகரித்து…
நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.…
கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்…
ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.…
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும்…
கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர…
This website uses cookies.