சினிமா / TV

மிஷ்கினை பற்றி உங்களுக்கு என்னங்க தெரியும்…நடிகர் சமுத்திரக்கனி ஆவேசம்.!

சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின்

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இதையும் படியுங்க: கடையை இழுத்து மூடுற நேரம் வந்தாச்சு…விடாமுயற்சிக்கு வந்த பெரும் சிக்கல்.!

சமீப காலமாக இவருடைய மேடைப்பேச்சு அநாகரீகமாக உள்ளது என பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்துள்ள ராமம் ராகவம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசிய போது மிஷ்கின் சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக கூறினார்,நான் உடனே ஷாக் ஆகி நீ ஏன் அண்ணா இந்த முடிவு எடுக்கணும்,உனக்குள் இன்னும் இனைறய திறமை இருக்கு என கூறினேன் என்று கூறினேன்.

மேலும் இயக்குனர் மிஷ்கின் நிறைய நல்ல விசயங்களை செய்துள்ளார்,அது யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை,ஒரு சமயம் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி மிஷ்கின் படத்தை பார்த்துவிட்டு அவருடைய சொந்த செலவில் கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஷங்கர் சார்,மணிரத்தினம் சார் என எல்லோரையும் அழைத்து ப்ரீ ஷோ மதுரையில் நடத்தினார்,நான் உடனே மிஷ்கினிடம் நீ ஏன் இவ்ளோ செலவு பண்ணுறன்னு கேட்ட போது,விசாரணை ஒரு நல்ல படம் அது நான் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என செய்தார்.

இதை மாதிரி நிறைய நல்ல படங்களுக்கு அவர் ஆதரவு அளித்துள்ளார்,கொட்டுக்காளி திரைப்படத்தின் போது கூட நிர்வாணமாய் நிக்கிறேன் என்று கூறினார்,அப்போது அவரிடம் நான் கேட்ட போது டேய் ஏதாவது ஒரு விதத்துல இந்த படம் மக்களிடம் போய் சேராதா ,மிஸ்கினு ஒருத்தன் இப்படி பேசுனானே இந்த படத்தில் என்ன இருக்குனு ரசிகர்கள் பார்ப்பங்களா என்று என்னிடம் சொன்னார்,இந்த மாதிரி சினிமாவை ரொம்ப ஆழமாக நேசிக்கக்கூடிய ஒருவராக மிஷ்கின் இருக்கிறார்.

அவர் எப்போதும் நல்ல படங்களை ஆதரித்து,அதை தன்னுடைய சொந்த முயற்சியில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பார் என அந்த பேட்டியில் சமுத்திரக்கனி தெரிவித்திருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.