தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகம் ஆகி பின்பு நடிகர்,இயக்குனர் என கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.இவர் முதன்முதலில் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா பயணத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் பிரபல வில்லன் நடிகராக இருந்த ஒருவரை பார்த்து தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது என கூறியிருப்பார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தன்னுடைய அசாதாரண நடிப்பால்,அதுவும் நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகர் ரகுவரன்,இவரது தனித்துவமான நடிப்பு மற்றும் அவரது குரல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரக்கனி என்னுடைய ரோல் மாடல் ரகுவரன் சார் தான்,அவரை போல தான் நான் நடந்துகொள்வேன்,அவரை பார்த்து தான் எனக்கு நடிக்க ஆசையே வந்தது என தன்னுடைய ஆரம்பல கால பயணத்தை அந்த நேர்காணலில் பகிர்ந்திருப்பார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரு.மாணிக்கம் திரைப்படம் அனைவரையும் பாராட்டை பெற்று OTT தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது,இப்படத்தில் இவர் ஒரு நேர்மையான மனிதராக நடித்திருப்பார் என்று சொல்வதை விட வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம்,அந்த அளவிற்கு மிக அற்புதமாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்திருப்பார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.