சம்யுக்தா இதோட நிறுத்திக்கோ.. அப்படி என்ன தப்பா நடந்துகிட்டேன்?.. கொந்தளித்த விஜே ரவி..!

அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளநிலையில், இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

முன்னதாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டு உள்ளார்.

இதற்கான ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார் விஷ்ணுகாந்த். அதில், ஆடியோவில் அண்ணனாக பேசியவருடன் தன்னிடம் காதலித்த போது தவறாக நடந்து கொண்ட ரவியிடம் பேசாமால் இருக்க முடியவில்லை என்று பல விதமான காரணங்களை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

இப்படி அரை மணி நேரம் சம்யுக்தா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை சம்யுக்தா போட்டுள்ளார்.

அந்த பதிவில் வைரலாகும் ஆடியோ பற்றி பலர் கேள்விகளை கேட்டும் திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறியும் திட்டித்தீர்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தும் பதிலளித்துள்ளதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சம்யுக்தா இணையத்தில் பகிர்ந்து உள்ளது குறிப்டத்தக்கது.

இந்நிலையில், விஷ்ணுகாந்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விஜே ரவி, தன்னை சுற்றி குடும்பத்தினர் பலர் இருக்கிறார்கள். தான் நல்ல அம்மா, அப்பாவுக்கு பிறந்தவன் என்றும், தான் சம்யுக்தா கிட்ட தப்பா நடந்து கிட்டேன் என்று சொல்வதை கேட்கும் போது வியப்பாக உள்ளது என்றும், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 475கே பாலோவர்ஸ் இருக்காங்க இந்த இடத்தை பிடிக்க தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று தனக்கு மட்டும்தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை தன்னுடன் இணைந்து நடித்த நடிகர்களிடம் தான் ஒரு நல்ல நண்பனாகத்தான் இருந்து இருக்கிறேன் என்றும், ஒரு விஷ்ணுகாந்த் சொல்வது போல தான் தப்பானவனாக இருந்து இருந்தால், மற்ற நடிகைகளும் தன்னை பற்றி புகார் கொடுத்து இருப்பார்களே என்றும், விஷ்ணுகாந்தின் புகாருக்கு தான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, தன்னுடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும் தான் எப்படி என்று என விஜே ரவி விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.