மாடல் அழகியாக இருந்த சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது.
விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத் துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம் அதன் பின் கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து நடித்தார். மேலும், விஜய் நடிப்பிலும் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வரும் சம்யுக்தா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வருவார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் யாருக்கும் இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை கூறி வருந்தியுள்ளார்.
என்னுடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அவர் குடும்பத்திற்காக தான் தனியாக சென்று இப்படி கஷ்டப்படுகிறார் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் அங்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. கொரோனா பரவல் காலக்கட்டத்தில் வேறொரு பெண்ணுடன் பழக ஆரம்பித்த அவர் 4 வருடங்களாக அவருடன் தான் இருந்து வருகிறார். இந்த விஷயத்தை அறிந்தவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒருவர் மற்றொருவருடன் உறவில் இருக்கிறார் என்றால், உங்களிடம் மிகவும் ரூடாக நடந்து கொள்வார். என் கணவரும் அப்படித்தான் என்னிடம் நடந்துக்கொண்டார். இத்தனை வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் நான் இன்னும் அந்த பிரிவில் இருந்து நான் வெளிவரவில்லை என்று உருக்கமாக பேசினார் சம்யுக்தா. சம்யுக்தா தன் மகனுடன் சென்னையில் தனிமையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
This website uses cookies.