சினிமா / TV

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை பூர்வீகமாக கொண்ட தர்ஷன் மாடலிங் துறையில் மிகப் பிரபலமானவராக வலம் வந்தார். 2017 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் போத்தீஸ், நண்டு பிராண்டு லுங்கிகள் போன்ற பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது அவரை தமிழர்களிடையே பிரபலமாக்கியது. 

இந்த நிலையில் தர்ஷன் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தனது வீட்டின் முன் பாதையை அடைத்தபடி ஒரு கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததால் கார் உரிமையாளருக்கும் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. 

இந்த வாக்குவாதத்தில் தர்ஷனின் தம்பியின் முகத்தில் எதிர்தரப்பினர் சூடான காபியை ஊற்றிவிட்டதாகவும் அதனால்தான் கைக்கலப்பு வரை இந்த விவகாரம் சென்றதாகவும் தர்ஷன் தரப்பு கூறுகிறது. கார் உரிமையாளர் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் என்று தெரிய வருகிறது. அவரின் கர்ப்பமான மனைவியை தர்ஷன் தாக்கியதாக எதிர்தரப்பினர் கூறுகின்றனர். இந்த பிரச்சனையில் கார் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் தர்ஷன் நேற்று கைது செய்யப்பட்டார். 

வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, தர்ஷனின் முன்னாள் காதலி. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபிறகு அவர் என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று சனம் ஷெட்டி புகார் அளித்திருந்தார். 

தற்போது தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “பிக்பாஸ் தர்ஷனை கைது செய்துவிட்டது குறித்த செய்திகளை எனது நண்பர்கள் எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்தார்கள். நான் மனதை தொட்டுச் சொல்கிறேன். அந்த செய்தியை பார்த்தபோது முதலில் எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய துரோகங்களை அனுபவித்துவிட்டேன். ஆதலால் எனக்கான ஒரு நியாயம்தான் இது என எனக்கு தோன்றியது. 

நானும் ஒரு சாதாரண பெண்தானே, எனக்கும் எமோஷன்ஸ் எல்லாம் இருக்கிறது. ஆனால் எனக்கு சில மதிப்புகளும் உள்ளது. இன்னொருத்தருக்கு நடக்கும் அநியாயத்தில் என்னுடைய நியாயத்தை நான் தேட முடியாது. எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டேன். தர்ஷனின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவர்களுக்காக நான் குரல் கொடுத்திருப்பேனா இல்லையா என்று கேட்டேன். நிச்சயமாக நான் கொடுத்திருப்பேன். 

என் மனசாட்சிக்கு எதிராக ஒரு விஷயத்தை செய்தால் எனக்கு இரவு தூக்கம் வராது. நான் யாருக்கும் வேண்டுமென்றே கெடுதல் நினைத்தது இல்லை. எனக்கு தர்ஷன் விவகாரத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. ஒரு ஜுஜுபி பார்க்கிங் சண்டையில் ஒரே நாளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் தர்ஷன். இவ்வளவு வேகமா சட்டம் வேலை செய்யுமா என்ற பெரிய சந்தேகம் எங்களுக்கு வருமா இல்லையா? 

வார இறுதியான வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை திங்கட்கிழமையில்தான் தொடங்கும். அதற்கு முன்பே இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எதிர்தரப்பினர் இன்னும் சிசிடிவி காட்சிகளை வெளியிடவில்லை. ஆதலால் இந்த பிரச்சனைக்கு பின்னால் இருக்கும் உண்மை நிச்சயமாக வெளிவரவேண்டும்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார் சனம். 

https://www.instagram.com/p/DIBy2V4yEXk

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.