கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை அடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் பற்றி பல பேர் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தங்களது கருத்துக்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகையான சனம் செட்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் அந்தப் போராட்டத்தின் போது பேசிய நடிகை சனம் செட்டி… நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிட சொல்கிறார்கள் .
இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என்னுடைய வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்போதும் எப்படி பொழுது போக்குக்காக பதிவுகளை பகிர முடியும்? இதனால் சினிமா வாய்ப்புகள் போனால் கூட போகட்டும் பரவாயில்லை… எது போனாலும் நான் பேசுவேன்.
கல்கத்தா மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என்று என்ன நிச்சயம்? என்ன கியாரண்டி ? யார் கியாரண்டி கொடுப்பார்கள்? ஹேமா அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது? அதனால் இப்போது இருக்கும் தண்டனை போதாது பாலில் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுத்து போடவேண்டும்.
அதை பார்த்து யாருக்கும் அந்த ஒரு சிந்தனை கூட வரவே கூடாது. ஆணுறுப்பை வெட்டி வீசினால் தான் பெண்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அறவே ஒழிக்க முடியும். நம் நாட்டில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்காது என்பதை உறுதி செய்ய முடியுமா?
நீதிமன்றம் காவல்துறை சட்டம் எல்லாம் எதற்கு? தமிழ்நாட்டில் 6 முதல் 10 வரை உள்ள குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒருத்தனுக்கு நாம கொடுக்கிற தண்டனையை பார்த்து இன்னொருத்தர் யாருக்கும் அதுபோன்ற சிந்தனை கூட மனதில் வரக்கூடாத அளவுக்கு நாம் அதை ஏற்படுத்த வேண்டும் என மிகுந்த ஆவேசத்தோடு நடிகை சனம் ஷெட்டி பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.