“அர்ஜூன் ரெட்டி”, “அனிமல்” போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்ததாக இயக்கப்போகும் திரைப்படம் “ஸ்பிரிட்”. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க உள்ளார். முதலில் இத்திரைப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தீபிகா படுகோன் இத்திரைப்படத்தில் இருந்து சில காரணங்களால் விலகிவிட்டார்.
தீபிகா படுகோன் விலகியதற்கு சரியான காரணம் இதுதான் என்று கூறமுடியவில்லை என்றாலும் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து பல செய்திகள் உலா வருகின்றன. அதாவது தீபிகா படுகோன் அதிகளவு சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. மறுபக்கம் இத்திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள் சில இருப்பதாக சந்தீப் ரெட்டி கூறியதால் அக்காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்த தீபிகா படுகோன் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
தீபிகா படுகோன் வெளியேறியதாக செய்திகள் தெரிவித்த நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை திரிப்டி திம்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சந்தீப் ரெட்டி வங்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அறிவித்ததோடு மட்டுமல்லாது தனது எக்ஸ் பக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் ஒருவரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“நான் ஒரு கதையை ஒரு நடிகரிடம் கூறும்போது அதில் 100% நம்பிக்கை வைக்கிறேன். நடிகருக்கும் எனக்கும் சொல்லப்படாத ஒரு வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தம் இருக்கும். ஆனால் இதனை செய்ததில் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள்.
ஒரு இளம் நடிகரை கீழே இறக்குவதும் எனது கதையை வெளியே கசியவிடுவதும். இதுதான் உங்கள் பெண்ணியமா?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது ஒரு அழுக்கான PR (Dirty PR) விளையாட்டு என்றும் அப்பதிவில் விமர்சித்துள்ளார்.
“ஸ்பிரிட்” திரைப்படத்தின் கதையை தீபிகா படுகோன் தனது நெருக்கமான ஒருவரின் மூலம் கசியவிட்டுவிட்டார் என்று செய்திகள் தெரிவித்த நிலையில்தான் சந்தீப் ரெட்டி வங்கா இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கன்னட அமைப்பினரை கடுப்பாக்கிய பேச்சு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
முன்னணி வில்லன் நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தொடக்கத்தில் உதவி இயக்குனராக…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க.…
அறிக்கை போர் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு சமீப நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இருவரும் ஒருவருக்கொருவர் மாறி…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு…
அரசியல்வாதி விஜய் விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும்…
This website uses cookies.