இணையத்தில் சமீப நாட்களாக தீயாய் பரவிக் கொண்டிருக்கும் செய்திதான் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறார் என்று.
நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவை பதம் பார்த்தது.
அதுமட்டுமல்லாமல், நடிகையின் மேல் உள்ள காதல்தான் காரணம் என்றும், அந்த நடிகையுடன் விஜய்க்கு தவறான உறவு உள்ளது என்றும், இதை அறிந்து தான் சங்கீதா சென்று விட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் பரவியது.
ஆனால், அது உண்மையில்லை. அந்த நடிகை தனது நீண்ட கால காதலரை தான் இன்னும் 4 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் வெளிவந்தது.இதன்பின் அந்த நடிகைக்கும் விஜய்க்கும் இடையே எந்த ஒரு தவறான உறவும் இல்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள்.
சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்முலம் பலநாள் சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.
இதனிடையே, நடிகர் விஜய்யை அவரது மனைவி சங்கீதா கடுமையாக திட்டிய சம்பவம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் சாந்தனுவின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்துள்ளாராம்.
முன்னதாக, விஜய் தாலி எடுத்து கொடுத்து தான் சாந்தனு, கீகீ திருமணம் நடைபெற்று உள்ளது. இதனை விஜய் தனது மனைவி சங்கீதாவிடம் வீட்டிற்கு சென்றவுடன் தெரிவித்த, நிலையில், இதை கேட்டவுடன் சங்கீதா திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுப்பது என்பது பெரியவர் செய்யவேண்டிய விஷயம் என்றும், நீங்க ஏன் செஞ்சீங்க என விஜய்யை திட்டினாராம் சங்கீதா. இந்த விஷயத்தை சாந்தனு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.