தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சங்கீதா . ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையானார். இவர் கபடி கபடி படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக பிதாமகன் படத்தில் நடித்தது நடிகை சங்கீதாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்தது. வெற்றிலை பாக்கு வாயில் கெட்ட வார்த்தைகள் பேசும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இவர் பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய சங்கீதா, நான் நிகழ்ச்சி ஒன்றில் கிரிஷை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. நான் தான் அவரிடம் என் காதலை சொன்னேன். பின்னர் 6 மாதத்திலே எங்களது திருமணம் நடைபெற்றது. க்ரிஷ் குடும்பத்தார் எங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே இல்லை.
இதனால் கடைசி நிமிடம் வரை எங்களுக்கு திருமணம் நடக்குமா? என்றே சந்தேகம் தான். திருமணம் நடந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைந்தேன். ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. திருமணத்திற்கு பின்னர் தான் பலப்பல பிரச்சனைகள் வந்தது. குறிப்பாக இரண்டு பிரபலங்கள் திருமணம் பண்ணிட்டா அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என பலர் கூறுகிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. இரண்டு செலபிரிட்டி திருமணம் செய்துக்கொண்டாள் அவர்கள் வாழ்க்கை ஒரு உறைக்குள் இரண்டு கத்தி இருப்பது போல் தான் இருக்கும். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்பதிலே வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் .
அப்படித்தான் எங்கள் வாழ்க்கையிலும் வந்தது. ஆனால் நாங்கள் இருவரும் என்ன பிரச்சனை வந்தாலும் நாம ஸ்ட்ராங்கா இருக்கணும். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் இருப்பேன். எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க இருக்கணும் அந்த அன்பு மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும் என்பதை இருவரும் மனதில் கொண்டு பிரச்சனைகளை தாண்டி வாழ்க்கை நடத்தினோம் என கூறினார் நடிகை சங்கீதா.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.