கதை சிறப்பாக இருந்தது…. விக்னேஷ் சிவன் படத்தை நிறுத்திய அஜித் குறித்து பேசிய சந்தானம்!

நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அது கை கூடி வரவில்லை. ஆம் கதை பிடிக்கவில்லை என கூறி விக்னேஷ் சிவனை அஜித் அப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு மகிழ்திருமேனியை இயக்க கமிட் செய்த நிலையில், விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் கருத்து வேறுபாடு என்று பலவிதமான செய்திகள் வெளியானது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து AK62 பெயரை நீக்கி தான் அப்படத்தில் இருந்து விலகியதை சூசகமாக அறிவித்தார். AK62-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அஜித் மீதான அன்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தி வந்தார். அதையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படமொன்றை இயக்கி வருகிறாராம். அதில் மறைந்த ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க அப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ஏகே 62 படத்தில் சந்தானம் கமிட் ஆகியிருந்ததாகவும் அந்த படம் நின்றுபோனது குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, “விக்னேஷ் சிவன் என்னிடம் கதை கூறினார். அதில் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. அது சீரியஸான ரோல் ஆனாலும், நகைச்சுவையாகவும் இருந்தது. அந்த படத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன்.

படப்பிடிப்பின் போது அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என அறிவிக்கலாம் என இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை.” என கூறி வருத்தப்பட்டார். தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.