சினிமா / TV

பழைய வித்தையை கையில் எடுக்கும் சந்தானம்…அடுத்தடுத்து படங்களின் அப்டேட்டை போட்டுடைத்த தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய காமெடியால் ஜொலித்தவர் நடிகர் சந்தானம்.இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

கரியரின் உச்சத்தில் இருந்த போது காமெடி ரோலை விட்டு ஹீரோவாக நடிக்க களமிறங்கினார்.தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வந்த சந்தானத்தை ரசிகர்கள் பெரிதாக கொண்டாடவில்லை,இருந்தாலும் சந்தானம் ஹீரோவாக நடிக்கவே முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பொங்கல் அன்று வெளியான மதகதராஜா திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி கலக்கலாக இருந்தது மட்டுமில்லாமல்,பழைய சந்தானத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடியனாக திரையில் ரசிகர்கள் பார்த்ததால் அவர் மீண்டும் காமெடி ரோலை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்,பல திரைப்பிரபலங்களும் அவரை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சந்தானம் இனிமேல் காமெடி ரோலில் நடிக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தஞ்ச ஜெயன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் நான் சந்தானத்திடம் பேசினேன்,உங்களுடைய காமெடி கண்டிப்பாக இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் எனவே நீங்கள் ஹீரோவாக ஒரு படத்தில் வாங்கும் சம்பளம் காமெடியனாக நடித்தாலும் வழங்கப்படும்,அதனால் தயவு செய்து காமெடி ரோலில் நடிங்கள் என கூறினேன்,அதற்கு அவரும் இரண்டு மூன்று படங்கள் நீங்கள் சொல்லுவது போல செய்து பார்க்கலாம் என உறுதி அளித்தார் என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

மேலும் சந்தானம் காமெடியாக விஷால் கூட ஒரு படம்மும் ரவி மோஹனுடன் ஒரு படமும் ஆர்யா கூட ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவலும் அவர் கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.