சினிமா / TV

என்ன இதுக்கு தான் கூப்பிட்டியா? தனுஷை முகத்திற்கு நேரா திட்டிய சரண்யா பொன்வன்னன்!

தமிழ் சினிமாவில் தனுஷ் சிவகார்த்திகேயன், விஷால், உதயநிதி ஸ்டாலின், அஜித், விக்ரம் , விஷ்ணு விஷால், விமல் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் சரண்யா பொன்வன்னன் .

இவர் அம்மா கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமாவில் நடித்து பிரபலம் ஆனார். அம்மா ரோல் என்றாலே இயக்குனர்களுக்கு டக்கென ஞாபகத்துக்கு வருந்துவிடுவார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி இந்த திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடிகை சரண்யா பொன் வண்ணன் நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கான போர்ஷன் மிகக்குறுகியது. காட்சிகள் குறைவாக இருந்தாலும் அது அத்தனையும் மிகவும் அழுத்தமான காட்சிகள் தான். குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற அம்மா அம்மா பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி சரண்யா பொண்ணுகளுக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததோடு அவருக்கு ஒரு நல்ல அடையாளமான வெற்றி படமாகவும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார் நடிகை சரண்யா பொன் வண்ணன் .

இந்த திரைப்படத்தின் கதையை தனுஷ் என்னுடைய வீட்டிற்கு வந்து சொன்னார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்து கதை சொல்கிறேன் எனக்கு சாப்பாடு எல்லாம் சமைச்சு போடுங்க என்று பேசி என்னிடம் கதை சொன்னார். ஆனால், படத்தில் நடித்தபோது எனக்கு குறைவான காட்சிகள் இருப்பதை உணர்ந்து ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

இப்படிப்பட்ட படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எனக்கு அந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போதே தோன்றியது. அதுமட்டுமில்லாமல் படத்தில் என்னுடைய காட்சிகள் ரொம்ப குறைவு என்பதால் நான் அடிக்கடி தனுஷிடம் சென்று என்னை ஏன் இந்த படத்தில் கூப்பிட்டீர்கள்? என அவரை தொடர்ந்து கேள்வி எழுப்பி நச்சரித்துக் கொண்டே இருந்தேன்.

இதையும் படியுங்கள்: இப்போ கூட அவங்க வந்தா கல்யாணம் பண்ணிப்பேன்…. 83 வயசிலும் நடிகை மீது ஆசையா?

ஆனால், நடிகர் தனுஷோ அமைதியாக இருங்கள். படம் வந்த பிறகு பாருங்கள். உங்களோட போர்ஷன் மிகச்சிறப்பாக இருக்கும் என சொல்லி என்னை சமாதானப்படுத்துவார். அதன் பிறகு படம் வெளியாகிய மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. நான் இவ்வளவு காட்சிகளில் நடித்திருக்கிறேனா என்பது எனக்கு அந்த படத்தின் டப்பிங் பேசும்போது தான் தெரிய வந்தது என சரண்யா பொன்வண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.