80 காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார். இவர், தமிழில் முன்னாடி நடிகர்களுடன் நடித்து அசத்திருந்தார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள்தான் கனகா. தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் அன்பினால் வளர்க்கப்பட்ட கனகாவிற்கு கரகாட்டக்காரன் படம் தான் மிகவும் புகழை வாங்கி கொடுத்தது.
திடீரென இவரது தாயார் உயிரிழந்த நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் கனகா தவித்து வந்தார். தந்தையுடன் சொத்து பிரச்சனையால் தகராறு செய்தும் வந்தார். இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்து வந்த கனகா நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.
மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!
இந்நிலையில், பாழடைந்த வீட்டில் பூட்டப்பட்ட கதவுகளை திறக்காமல் வீட்டிலேயே இருந்த கனகா எப்போது வெளியே வருகின்றார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் பலர் இருந்தனர். சமீபத்தில், நடிகை குட்டி பத்மினி அவரது வீட்டருகே காத்திருந்து ஒருநாள் கனகாவை பார்த்ததுடன் அவருடன் புகைப்படமும் எடுத்து வெளியிட்டார்.
இப்படி ஒரு நிலையில் சரத்குமார் கனகா குறித்து பேசி உள்ளார். அதில், அவர் நடிகை கனகா ஒரு நல்ல உழைப்பாளி சினிமா மீது அவர் அதிக காதலைக் கொண்டு இருந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்கள் மனதில் ஒரு அழியாத ஏற்படுத்திவிட்டது. கனகாவுக்கும் சினிமாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சோகங்கள் தான் இவர் எந்த அளவிற்கு மனித வாடையை விரும்பாமல் இருக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவருக்கு சில உணர்ச்சிப் பிரச்சனைகள். அதில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்று நம்புகிறேன் என்று சரத்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
மேலும், சினிமாவில் பலருக்கும் இது போன்ற மன அழுத்தங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று நான் பலமுறை கூறி வருகிறேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.